இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலறியும் உரிமை சட்டத்தின் 11ஆம் பிரிவின் கீழ் குறித்த சட்டத்தின் செயற்பாட்டை கண்காணிக்கும் மற்றும் அமுல்படுத்தும் பிரதான நிறுவனமாக உள்ளது. குற்றமிழைக்கும் உத்தியோகத்தர்களுக்கு எதிரான, ஒட்டியொழுகாமை மீதான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை சிபார்சு செய்வதற்கும் அதிகாரங்களைக் கொண்டுள்ள ஒரு நியாதிக்க சுயாதீனசபையாக இது உள்ளது. சட்டத்தில் வரைவிலக்கணம் செய்த குற்றங்களைச் செய்தவர்களை (பிரிவுகள் 15இ38(2) மற்றும் 39(4))சட்டத்தின் முன் நிறுத்த அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
அரசியலமைப்புச் சபையின் சிபார்சின் பேரில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒரு தலைவரையும், 4 உறுப்பினர்களையும் அங்கத்தவர்களாககொண்டுள்ளது. இந்த ஆணைக்குழுவிற்கு 1) இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் 2) ஊடக நிறுவனங்கள், மற்றும் 3) ஏனைய சிவில் சமூக நிறுவனங்கள் (பிரிவுகள் 12 (1))ஆகியவற்றல் சிபாரிசு செய்யப்பட்ட தலா ஒருவரையும் நியமிப்பதற்கு அரசியலமைப்பு சபை கடமைப்பட்டுள்ளது.
சிபார்சு செய்யப்படும் நபர்கள் பொதுவாழ்வில் மதிப்பிற்குரியவர்களாக இருப்பதுடன், அரசியல், அரச துறை அல்லது நீதித்துறை அல்லது வேறு ஏதும் இலாபகரமான அலுவலகம் என்பவற்றுடன் அல்லது வேறு ஏதும் அரசியல் கட்சிகளுடன் தொடர்பற்ற இலாப நோக்கம் கொண்ட தொழில்வாண்மை அல்லது ஏதும் தொழிலை மேற்கொள்பவராக இல்லாது அனுபவமிக்கவராக இருக்க வேண்டும் (பிரிவு 12(2)).
ஆணையாளர்களின் பதவிக்காலம் 5 வருடங்களாக இருப்பதுடன் தகவலறியும் உரிமைச்சட்டத்தின் 12(6) பிரிவின் கீழ் விதிவிலக்களிக்கப்பட்டுள்ள தகவல்களை வெளியிடாதிருக்கவும் கடமைப்பட்டுள்ளார்கள் (பிரிவு 12(7)).
ஆணைக்குழுவானது ஒரு பணிப்பாளர் நாயகத்தையும் ஏனைய உத்தியோகத்தர்களையும் தேவையான பணியாளர்களையும் நியமிக்கும். ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அதன் நிறைவேற்று அதிகாரியாக விளங்குவார் (பிரிவு 13).
ஆணைக்குழு பாராளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் அதற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை கொண்டு செயற்படுவதுடன் அதற்கு கிடைக்கும் நன் கொடைகள், அன்பளிப்புக்கள் அல்லது மானியங்கள் மட்டும் வெளிநாட்டு மூலங்களில் இருந்து கிடைக்கும் நிதி ஆகியன ஆணைக்குழுவின் கணக்கில் வரவு வைக்கப்படும் (பிரிவு 16 (1)).








rti.commission16@gmail.com
011 2691625/ 011 2678980
011 2691625